சூடான செய்திகள் 1

தெமடகொடயில் வெடிப்புச் சம்பவம்

(UTVNEWS | COLOMBO) – தெமடகொட, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்றில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று(15) காலை 8.45 மணி அளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதற்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை-உலக சுகாதார ஸ்தாபனம்

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் – 31 பேருக்கு பிணை

ராஜிதவுக்கு மீண்டும் சுகாதார அமைச்சு பதவி வழங்க வேண்டாம்…