சூடான செய்திகள் 1

இலவச வீசா ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீசா வசதி எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள நிர்வாகி பசன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த இந்த வேலைத்திட்டத்தில் ஒரு மாதத்திற்கு மாத்திரம் இலவச வீசா சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது.

இலவச வீசா சலுகையின் மூலம், ஒரு மாத சுற்றுலா காலத்தின் பின்னர் சுற்றுலா பயணிகள் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பவேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள நிர்வாகி பசன் ரட்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றுலா மேம்பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இலவச வீசா நடைமுறை அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் கைப்பற்றப்பட்ட 7 ஆயிரத்து 420 லீற்றர் எதனோல்

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு ஜனவரியில் விசாரணைக்கு

விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது