சூடான செய்திகள் 1

வைத்தியர் ஷாபி எதிராக முறைப்பாடளித்த 3 பெண்களுக்கு இரகசிய எச். எஸ்.ஜீ. சோதனை

(UTVNEWS | COLOMBO) -குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக முறைப்பாடுகளை அளித்த மூன்று தாய்மாருக்கு போதனா வைத்தியசாலையில் இரகசியமான முறையில் எச்.எஸ்.ஜீ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அம்பலமானது.

குறித்த பரிசோதனை வைத்தியர் சரத் வீர பண்டாரவின் உத்தரவிற்கமைய நடை பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் எக்ஸ்-ரே (கதிர்வீச்சு) தொடர்பிலான வைத்திய நிபுணர்கள் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலம் ஊடாக இவ்வாறு வெளிப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா குருணாகலை பிரதான நீதிவான் சம்பத் ஹேவா வசத்திற்கு அறிவித்தார்.

Related posts

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

மஹிந்தவுக்கு தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா?

ஒப்பந்தத்தில் சிக்கல் – இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய அவுஸ்திரேலியா யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்

editor