சூடான செய்திகள் 1

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் சலுகை அட்டை

(UTVNEWS | COLOMBO) – மக்கள் பயனடையும் வகையிலான புதிய திட்டமொன்றை விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள், அரச சார்பற்ற ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட 25,00,000 மக்களுக்கு ச.தொ.ச மூலம் கழிவு விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட சலுகை அட்டைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க மேற்படி சலுகை அட்டைகளூடாக ச.தொ.ச மூலம் பெற்றுக் கொள்ளும் உணவுப் பொருட்களுக்கு இந்த விசேட கழிவுகள் வழங்கப்படும்.

Related posts

தேர்தல் விதிமீறல்கள் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று…