சூடான செய்திகள் 1

புர்க்காவை நிரந்தரமாக தடை செய்ய யோசனை முன்வைப்பு

 

(UTVNEWS | COLOMBO) -இஸ்லமிய பெண்கள் அணியும் புர்க்காவை நிரந்தரமாக தடை செய்வதற்கான சட்டத்திட்டங்களை வகுப்பதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனையை நீதி அமைச்சர் தலதா அத்துகோர நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார்.
இந்த யோசனை தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து அவசரகால சட்டத்தின் கீழ் புர்க்கா அணிவதற்கு தடை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குவைட்டில் பணிக்கு சென்ற 26 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

பிரதமர் ஒருவருக்கான தகைமை ரணிலிடம் இல்லை-முன்னாள் ஜனாதிபதி

மன்னம்பிட்டிய கோர விபத்து : சாரதி போதைப்பொருள் பயன்படுத்தினாரா??