சூடான செய்திகள் 1

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் இன்று நண்பகல் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை பகுதியிலிருந்து அன்னமலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது அதிகளவான பயணிகள் பஸ்ஸில் இருந்ததாகவும் இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டு தீர்மானம் திங்களன்று க் கொள்ளும் முறைமை தொடர்பான

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ; 10 பேர் கைது

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்