சூடான செய்திகள் 1

மரண தண்டனையினை நிறைவேற்ற இடைக்காலத் தடை உத்தரவு

(UTV|COLOMBO) – மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றினை இன்று(05) பிறப்பித்துள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்திருந்ததுடன் அதன் முதற்கட்டமாக நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Related posts

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கும் சாத்தியம்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: 8 பேருக்கு பிணை

கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா