சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – அக்மீமன – மானவில பகுதியில் பாடசாலை ஒன்றிற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட நபர் ஒருவர் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 39 வயதுடைய குறித்த நபர் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாராளுமன்றத்திற்கு அருகில் அமைதியின்மை

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் கொலை என உறுதி!

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் வைத்தியசாலையில்