விளையாட்டு

பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கட் தொடரில் இருந்து சிறந்த துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த தொடரியில் இருந்து விலகியுள்ளார்.

எனினும் குசல் ஜனித்பெரேராவுக்கு பதிலாக சகலதுறை வீரர், மிலிந்த சிறிவர்தன இலங்கை அணிக்கு அழைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை தம்புள்ளை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

5000 ஓட்டங்களுடன் 09 வது இடத்தைப் பிடித்த மெத்திவ்ஸ்

தோல்விக்கான காரணத்தினை விளக்கினார் தனஞ்சய

ஆசிய கிண்ணத்திற்கு இலங்கை அணியின் முதல்கட்ட குழாம் அறிவிப்பு…