சூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நேற்று இரவு அனுராதபுரம் – திருகோணமலை வீதி பங்குளம கோவில் அருகாமையில் இடம்பற்ற விபத்தில் பாதுகாப்பு பிரிவினை சேர்ந்த  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்து கொண்டிருந்த லொறி  ஒன்றுடன் மோதுண்டு  விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹொரவப்பத்தான பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவர் மனு தாக்கல்

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு

 முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு