சூடான செய்திகள் 1

அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் மற்றும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவும் தமது நாடு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் செல்லும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்..

இதேவேளை, இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புத் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

Related posts

மகளிர் தின விழா எதிர்வரும் 17ம் மற்றும் ஏப்ரல் 8ம் திகதிகளில்

எதிர்வரும் திங்கட்கிழமை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு