சூடான செய்திகள் 1

இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTVNEWS | COLOMBO)- கொத்தட்டுவ – முல்லவத்தை பகுதியில் இன்று(02) இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் கொத்தட்டுவ – ஐ.டி.டி.எச் வீதி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான துஷாரா வைஷாந்த தயாபிரிய என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சேனாவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம்

அத்தியாவசிய உணவு மொத்த விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்பு