சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம் நாளை

(UTV|COLOMBO) நாளைய தினம் (19)  திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் மாலை 4.00 மணிக்கு இராணுவ வீரர்களின் நினைவு தினம் பாராளுமன்ற  மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 யுத்தத்தில் உயிரிழந்த முப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோரை நினைவுகூர்ந்து, நாளைய தினம் விளக்கேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
இதற்கமைய, மதத் தளங்கள், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், முப்படையினரின் முகாம்கள், காவல்துறை நிலையங்கள் மற்றும் பொது மக்களின் வீடுகள் என்பனவற்றில் பிற்பகல் 7 மணிக்கு விளக்கேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த இம்ரான் ஆர்வம்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை