சூடான செய்திகள் 1

தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதம்…

(UTV|COLOMBO) வத்தளை – மாபோல – வுவவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசமாகியுள்ளது.

மேற்படி தீயணைப்பிற்காக கொழும்பு நகர சபையிற்கு உரித்தான இரு தீயணைப்பு வாகனங்களும், கடற்படையினருக்கு உரித்தான இரு தீயணைப்பு  வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் கசிவே தீ பரவலுக்கு காரணமாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில் , தீ பரவல் குறித்து வத்தளை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

 

 

Related posts

ஜனாதிபதி அடம்பிடிப்பது நல்லதல்ல – கிரியெல்ல

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய

ஹெரோயினுடன் நபரொருவர் கைது…