வகைப்படுத்தப்படாத

கரப்பான் பூச்சியால் பிரசாரத்தில் சிரிப்பலை…

(UTV|PHILLIPINES) கரப்பான் பூச்சியால் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பிரசார கூட்டத்தில் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

போஹால் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ரோட்ரிகோ துதர்தே கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் எதிர்க்கட்சிகள் குறித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது, கரப்பான் பூச்சி ஒன்று அவரது வலது தோள்பட்டையின் மீது வந்து அமர்ந்தது.

அதனை பார்த்ததும், அதிபரின் பெண் உதவியாளர், தன் கையில் வைத்திருந்த காகிதத்தால் கரப்பான் பூச்சியை விரட்ட முயன்றார். ஆனால் அது, ஜனாதிபதியின் தோள்பட்டையில் மேலும், கீழுமாக ஓடி ஆட்டம் காட்டியது.

ரோட்ரிகோ துதர்தே இதையடுத்து தனது கையால் கரப்பான் பூச்சியை தட்டிவிட்டுவிட்டு, ‘இது எதிர்கட்சியின் சதி’ என நகைச்சுவையாக கூறி, பேச்சை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

Sri Lanka’s Kumar Dharmasena, Ranjan Madugalle named Officials for World Cup Final

கட்டுகஸ்தோட்டை, திகனையில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், கடைத்தொகுதிகளை அமைச்சர் ரிஷாட் பார்வையிட்டார்..-(படங்கள்)

කොළඹ අලුත්කඩේ අධිකරණය වෙනත් ස්ථානයක ස්ථාපිත කිරීමට කැබිනට් අනුමැතිය.