சூடான செய்திகள் 1

டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகள் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் டென்மார்க் நாட்டு செல்வந்தரான அன்டர்ஸ் போல்சனின் (Anders Holch Povlsen) 03 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

போல்சன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அல்மா, எஸ்ட்ரிட், எக்னஸ், அல்பரட் ஆகிய 4 பிள்ளைகளில் மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் மாத்திரம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

என்டர்ஸ் ஹோல்ச் போல்சன் பிரித்தானியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனிப்பட்ட அசையா சொத்துக்களுக்கு உரிமையாளர் என்பதுடன், அவர் ஸ்கொட்லாந்திலும் பெருமளவு காணிக்கு உரித்துடையவராவார்.

 

 

 

Related posts

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு அதிகாரிகள் உதவி

இம்முறை பொசொன் வைபவத்தை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை

மீள் சுழற்சி இயந்திரத்திற்கான அமைச்சரவை அனுமதி