சூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் விசேட ரயில் சேவைகள்

(UTV|COLOMBO) புத்தாண்டில் தூர இடங்களுக்குச் சென்ற மக்களின் நலன்கருதி. இன்றும்  நாளையும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய , இன்று மருதானை – மாத்தறை ரயில் நிலையங்களுக்கு இடையிலான இரண்டு விசேட மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. மருதானையிலிருந்து
மாத்தறை, பெலியத்த வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, காங்கேசந்துறை ஆகிய இடங்களுக்கும் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அதேவேளை, காங்கேசந்துறை, பெலியத்த ஆகிய இடங்களிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான மேலதிக இரண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

 

 

 

 

Related posts

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

டொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு