வணிகம்

நாளை முதல் நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை

(UTV|COLOMBO) நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு விரிவாக முன்னெடுக்கப்படும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார்.

இந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெற்தொகைகள் உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படும். இவற்றைக் களஞ்சியப்படுத்தவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இதுவரை 5 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்தார். அம்பாறையில் ஆகக்கூடுதலான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி…

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ – 15 இலட்சம் ரூபா வரை பிணை இன்றி இலகுகடன் வசதி

தேசிய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று நிர்ணயம்