சூடான செய்திகள் 1

கெசெல்வத்தை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) கெசெல்வத்த – சாங்சி ஆரச்சிவத்த பிரதேசத்தில் 07 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசல்வத்த காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய சந்தேக நபர் கெசெல்வத்த பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதுடன் அவர் இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

குருந்தூர்மலை சர்ச்சை : களத்திற்கு விரைந்த நீதிபதிகள் குழாம்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உலகின் மாபெரும் புத்தகக் கண்காட்சி இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில்