சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

(UTV|COLOMBO) நாட்டில் இன்று கடுமையான வெப்பநிலை நிலவும் என வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலைஅதிகரித்திருக்கும் என தெரியவருகிறது.

இந்த நிலையில் முடியுமான அளவில் வெயிலில் தொடர்ந்து நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் முதியோரும், சிறுவர்களும் கடுமையான வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை மையம் கோரியுள்ளது.

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றமைக்கு எதிர்ப்பு

அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ள அமெரிக்க உதவிச் செயலாளர்

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்