சூடான செய்திகள் 1

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

(UTV|COLOMBO) பொகவந்தலாவ பெற்றேசோ தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்தும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள இன்று(10) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Related posts

சகலரும் இணங்கக்கூடிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் மரணத்திற்கான காரணம் இதுவே

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி இன்று தெரிவுக்குழுவுக்கு