சூடான செய்திகள் 1

சேனா படைப்புழு தாக்கம் – 307 விவசாயிகளுக்கு நட்ட ஈடு

(UTV|COLOMBO) சேனா படைப்புழு தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் முதல்கட்ட வேலைத்திட்டம் நாளை(10) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது.

முழுமையாக பாதிக்கப்பட்ட 307 விவசாயிகளுகளுக்கு இதன்போது நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, பாதிப்புக்குள்ளான ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முதற்கட்டமாக அம்பாறை, அனுராதபுரம், மொனராகலை மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விவசாய காப்பறுதி சபை, விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து இதனை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யானை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச நிறுவனங்கள் நிபந்தனை அற்ற விதத்தில் ஒத்துழைப்பு முக்கியம்

உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த மர்ம கும்பல்

ஆனமாலு ரங்க கொலை : குடு ரொஷானின் சகோதரன் கைது