சூடான செய்திகள் 1

மாவனெல்லை பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள ஆசிரியர் கலாசாலையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பேரூந்து ஒன்று மாவனெல்லை – பஹல கடுகண்ணாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35  வரையில் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காயமடைந்தவர்களில் 35 பேர் மாவனெல்லை மருத்துவமனையிலும், 6 பேர் கண்டி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு(05) அட்டாளைச்சேனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.!  -ரிஷாத் பதியுதீன்

பாராளுமன்றம் இன்று மதியம் கூடவுள்ளது

மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு போட்டியிட முடியாது