சூடான செய்திகள் 1

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியில் 42 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாப்பொதிகளுயுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நேற்று(28) அதிகாலை மேற்கொண்ட விசேட கண்கானிப்பு நடவடிக்கையில் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சா சுமார் 42 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.

 

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களுக்கு பூட்டு

இராணுவ நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகம் பயன்படுத்தப்படமாட்டாது

யாழில் மருத்துவ கண்காட்சி நாளை ஆரம்பம்