சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித்தினம்

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளும் இறுதித்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில், பாடசாலை பரீட்சார்த்திகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விண்ணப்படிவங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.

மேலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை தமது விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

ஜா – எலயில் துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் ஆரம்பம்

“ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகை : நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை” அமைச்சர் கஞ்சன

நாலக சில்வா எதிர்வரும் ஜனவரி 02 வரையில் விளக்கமறியலில்