சூடான செய்திகள் 1

இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் மரணம்

(UTV|COLOMBO) கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியில் வௌிநாட்டவரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தமிழகம் – இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இந்தியாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வந்துள்ள நிலையில் , திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக இவ்வாறு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அங்கு அமைந்திருந்த கொங்க்ரீட் தூண் ஒன்றினை கட்டிப்பிடித்தப்படி குறித்த நபர் நின்றுள்ளார்.

எனினும் , பின்னர் அவர் குறித்த தூணில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

 

 

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று

5 இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது – வர்தமானி வெளியீடு

ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம்