சூடான செய்திகள் 1

சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMB) சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பேரூந்து நடத்துனர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் தாக்கியமை காரணமாக குறித்த வீதி இல ,பேரூந்து சேவை இன்று(07) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சமிந்த அனுர டி சில்வா(41) தற்போது மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை அமுலாக்குமாறு சிலாபம் பொதுப் போக்குவரத்து அமைப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

 

Related posts

ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்

விஜயகலாவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளவும்

அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை  அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு