சூடான செய்திகள் 1

மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இராஜதந்திர ரீதியில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

(UTV|COLOMBO) டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக கும்பல் தலைவன் மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினரை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் விஷடே அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் கூறியுள்ளார்.

இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை வௌிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு தலையிட்டு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இறுதி அறிக்கை நாளை

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில் – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதத்தில் தீர்வு