சூடான செய்திகள் 1

இரு நாட்டு தலைவர்களிடையிலான சந்திப்பு

(UTV||COLOMBO) இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட அதிதியாக வருகை தந்த மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் இன்று (05) ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாள் அரச சுற்றுலாவிற்காக ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய மாலைத்தீவு ஜனாதிபதி உட்பட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தனர்.

அவர் நேற்று (04) இடம்பெற்ற இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தில் விஷேட அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் இன்று அவர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் திட மற்றும் அரை திட உணவுகளில் வர்ண குறியீடு

விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான தீர்மானம்

ஓரின சேர்க்கையால் ஏற்பட்டுள்ள மோதல்