சூடான செய்திகள் 1

நாயை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO)-பலாங்கொட பிரதேசத்தில் வளர்ப்பு நாய் ஒன்றை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபரை இம்மாதம் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கு பலாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்று பலாங்கொட நீதவான் ஜயருவன் திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபர் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபரின் மனநலம் குறித்து பரிசோதித்து வைத்திய அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 14ம் திகதி பலாங்கொட பிரதேசத்தில் வளர்ப்பு நாய் ஒன்றை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு..

சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படவும் – சாகர, சஜித்திடம் வலியுறுத்தல்

வைத்திய நியமனத்தில், யுனானி வைத்தியர்களுக்கு அநீதி- ஜனாதிபதியை உடனே தொடர்புகொண்ட ரிஷாட்