விளையாட்டு

கிரிக்கெட் பேரவைக்கு புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்

(UTV|INDIA)-சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் (Shashank Manohar) பெயரிடப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளமையை அடுத்து, அந்தப் பதவிக்கு ஷஷாங்க் மனோகர் பெயரிடப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் பின்னர், டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

இதனிடையே, ஷஷாங்க் மனோகர் அடுத்த மாதம் முதல் தம்முடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

மலிங்கா சாதனையை பிராவோ சமன் செய்தார்

“ஷேன் வார்னேயின் மரணத்தில் சந்தேகமில்லை”

2006இல் எழுதிய வரலாற்றை இலங்கை அணி மாற்றியெழுதுமா?