சூடான செய்திகள் 1

முதலாம் தரத்திற்கான மாணவர்கள் இன்று(17) பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்

(UTV|COLOMBO)-2019ம் கல்வியாண்டிற்கு முதலாம் தரத்திற்கான மாணவர்கள் இன்று(17) பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.

இதற்கான தேசிய வைபவம், கிரிவுல்ல கனேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 10,194 பாடசாலைகளில், 9,193 பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் இயங்குகின்றன.

இந்நிலையில், வருடாந்தம் 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் முதலாம் தரத்திற்காக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமாறு பரிந்துரை?

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் – ஹிருணிகா

மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை