சூடான செய்திகள் 1

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு -புன்னக்குடா கடலில் நீராடச் சென்று, அலையில் அள்ளுண்டுச் சென்ற  மாணவனொருவனின் சடலம், இன்று (11) காலை மீட்கப்பட்டுள்ளதாக,  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி குமாரவேரலியார் கிராமத்தைச் சேர்ந்த, 14 வயதுடைய மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (10) மாலை, ஐந்து மாணவர்கள் புன்னக்குடா கடலில் நீராடுவதற்குச் சென்றிருந்தபோதே, குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய மாணவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ரிஷாட்!

தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் – மஹிந்த

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு