சூடான செய்திகள் 1

முழு மானை விழுங்கிய இராட்சத பாம்பு!

(UTV|COLOMBO)-கல்கிரியாகம பரவஹகம பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் இருந்து இராட்சத மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மான் ஒன்றை விழுங்கிய நிலையில் , நகர முடியாமல் மலைப்பாம்பொன்று உள்ளதாக கல்கிரியாகம வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி , குறித்த இடத்திற்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள் , குறித்த மலைப்பாம்பினை பிடித்து பாதுகாப்பான வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

மலைப்பாம்பினால் விழுங்கப்பட்ட மானின் கால் பாம்பின் வயிற்றுப்பகுதியில் காயமேற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 

Related posts

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றம்

இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை – வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்!

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம்