சூடான செய்திகள் 1

வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம்-கல்வி அமைச்சர்

(UTV|COLOMBO)-வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி சீரற்ற காலநிலையால் வீடுகளை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக சீருடைகள் மற்றும் பாதனிகளை பெற்றுக்கொள்ளும் வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் பாடப்புத்தகங்கள் சேதமடைந்திருந்தால் அதற்கு பதிலாக புதியு புத்தகங்களை வழங்குவதற்கும் செயற்படுமாறு கல்வியமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

 

 

 

 

Related posts

மன்னார் கிராமங்களின் அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா அமைச்சர் ரிஷாட்டினால் ஒதுக்கீடு!

மேலும் மூவர் குணமடைந்தனர்

பாதுகாப்புப் பிரிவினருக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருப்பதாக இராஜாங்க அமைச்சர்