சூடான செய்திகள் 1

சதொச நிறுவனத்தை உடைத்த மூவர் கைது

(UTV|NUWARELIYA)-நுவரெலியா சதொச நிறுவனத்தை உடைத்து பொருட்களை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்கள் நுவரெலியா காவல்துறையால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 70 ஆயிரம் ரூபாய் எனவும் சந்தேகநபரில் ஒருவர் சதொச நிறுவனத்தில் தொழில் புரிபவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் கொள்ளையிட்ட பொருட்களை முச்சக்கரவண்டியின் மூலம் கொண்டு செல்ல முயற்சித்த போது நுவரெலியா, மாகாஸ்தோட்ட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண் திடீர் சோதனையில் சிக்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் கெப்பிட்டிபொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

“ஜனநாயகத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக அமைய வேண்டுமென பிரார்த்தியுங்கள்” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!!!

பயங்கரவாத அவதானம் எதுவும் இல்லை – ஜனாதிபதி செயலகம்

பற்றி எரிந்த ஆடை தொழிற்சாலை