சூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு

(UTV|COLOMBO)-நாட்டில் நீடிக்கும் நிலைமையை கருத்திற் கொண்டு இடைக்கால கணக்கறிக்கையின் அங்கீகாரத்திற்கு இடமளிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தடுப்பது அவசியம்.

இதன் காரணமாக இடைக்கால கணக்கறிக்கையை ஆட்சேபிக்க கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கும் நிதி ஒதுக்கீட்டு பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக அவர் கூறினார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவும் கருத்து வெளியிட்டார்.

அரச தகவல் திணைக்களம்

 

 

 

 

Related posts

அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்க வேலைத்திட்டம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் நிராகரிப்பு

பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன்துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்