சூடான செய்திகள் 1

கலாபூஷணம் விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூஷணம் விருது  விழா திகதி குறிப்பிடப்படமால் ஒத்திவைக்கப்படுவதாக, கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விருது விழா தாமரைத்தடாகத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் கையால் விருது வாங்கமாட்டேன் என மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி என்பவர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, இந்த விருது ஒத்திவைக்கப்படுவதாக கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

எதிர்வரும் புதன்கிழமை எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

விவசாயக் காப்புறுதிக்காக 5,228 மில்லியன் ரூபா – அமைச்சர் மஹிந்த அமரவீர

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை