சூடான செய்திகள் 1

அடையாள வேலை நிறுத்தத்தில் புகையிரத தொழிற்சங்கம்?

(UTV|COLOMBO)-எதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சம்பளப் பிரச்சினைக்கு சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

அதன்படி எதிர்வரும் 26ம் திகதி நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் இதுவர தீர்வு வழங்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

போருக்கு பின்னரான வெறுமையில் திசைதிரும்பும் தமிழ் அரசியல்

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து!