சூடான செய்திகள் 1

சர்வதேச சமுத்திர மாநாடு இன்றும் நாளையும்

(UTV|COLOMBO)-2018 காலி கலந்துரையாடல்’ சர்வதேச சமுத்திர மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்றும்(22) நாளையும்(23) இடம்பெறவுள்ளது.

பிரதம அதிதியாகப் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்ப உரையை நிகழ்த்த உள்ளார். 50 நாடுகள் மற்றும் 17 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமுத்திரப் பாதுகாப்புத் துறைசார் நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும், இலங்கை கடற்படையும் இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.

‘ஒத்துழைப்பின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்திற்காக ஒன்றிணைதல்’ என்பது இம்முறை மாநாட்டின் தொனிப்பொருளாகும் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளத்திட்டம்

இன்று மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு