சூடான செய்திகள் 1

7 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் வட்டுகோட்டை – சித்தன்கேணி பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் வசமிருந்து 7 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த நபர் போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வெடிப்புச் சம்பவத்தில் 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது [UPDATE]

புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வைர விழா…