அரசியல்உள்நாடு

6ஆம் திகதி விவாதம் – திகதியை ஏற்றுக்கொண்ட அனுர

சஜித் பிரேமதாஸவுடனான விவாதத்திற்கு வழங்கப்பட்ட திகதிகளில் இருந்து ஜூன் 6 ஆம் திகதியை அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக விவாதத்தின் விவகாரங்களை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நளின் பண்டாரவுடன் விவாதம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் நோக்கம் குறித்து கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

 தேர்தல் மனு – உயர்நீதி மன்றம் உத்தரவு

நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து – மூவர் மருத்துவமனையில்

சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு

editor