இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 506 BYD மின்சார வாகனங்களை மேலதிக வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்தால் விடுவிக்க இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (03) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது.
வாகனங்களை இறக்குமதி செய்த ஜோன் கீல்ஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது