சூடான செய்திகள் 1

500 கோடி ரூபாய் பெறுமதியான வைரக்கல் கண்டுபிடிப்பு…

(UTV|COLOMBO) பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து  500 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டி – எருவ்வல பிரதேசத்தின் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பெஹலியகொட குற்றவிசாரணைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.இச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

10 மாத குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்த பெண்

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகத்துக்கான நடவடிக்கை!

கோட்டாபய ராபஜக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் – சந்திரிக்கா