உள்நாடு

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – நால்வர் காயம்

கெப்பெட்டிபொல – பொரலந்த பிரதான வீதியில் போகஹகும்புர பிரதேசத்தில் கார் ஒன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக போகஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ள நிலையில் போகஹகும்புர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஹகும்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதிக்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

editor

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்