உள்நாடுசூடான செய்திகள் 1

5 இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது – வர்தமானி வெளியீடு

(UTV | கொழும்பு) –

2019 பயங்கரவாத தாக்குதலின் பிற்பாடு பல இஸ்லாமிய அமைப்புக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் தடைகள் விதிக்கப்பட்டிருந்தவை 05 இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ, ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் – UTJ, அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் – ACTJ, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ , ஜமாஅத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா – JASM ஆகிய அமைப்புக்கள் மீதான தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வமைப்புக்களில் பறஹதெனிய (ஜம்மியது அன்ஸாரிஸ் சுன்னதில் மஹம்மதிய்யா) அமைப்பு மீதான தடை நீக்கம் தொடர்பில் அந்த அமைப்பு நன்றி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு மூலம் இலங்கையின் பல்வேறுபட்ட இடங்களில் அதிகமான சேவைகளை மேற்கொண்ட முக்கியமான அமைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசிரியர்கள் இருவர் இணைந்து செய்த காரியம்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

 தீக்குளித்த பெண் (24 வயது)  – காப்பாற்ற சென்ற கணவனுக்கு நடந்த கதி?