சூடான செய்திகள் 1

48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க புகையிரத தொழிற்சங்கம் தீர்மானம்

(UTV|COLOMBO) சம்பள பிரச்சினையை முன்வைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க புகையிரத  தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்தக தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் தொடருந்து நிலைய அதிபர்கள், சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து கண்காணிப்பு முகாமையாளர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இலங்கை-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கண்டியில் நூலகத்தை திறப்பு!

பெண் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் மறுசீரமைப்பு அமைச்சுவௌியிட்ட அறிக்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவற்துறையினர்…