இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
450 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் இன்று அறிவித்தது.
காஸ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பதற்றம் நீடித்து வருகிறது, இரு நாடுகளும் மாறி மாறி ஒத்திகை, சோதனைகளில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நீடிக்கிறது.