உள்நாடு

42 வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பாராளுமன்ற கட்டடத்தொகுதியின் கொன்கிரீட் மேல்தளம் (Roof Terrace) மீது காணப்படும் மண் அகற்றப்பட்டு திருத்தவேலைகள் இந்நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மாத்திரமன்றி, கூரைகளின் பீலிகள் (Roof Gutters), செப்புக் கதவு (Copper Door), பாராளுமன்ற மருத்துவ நிலையம் (Parliament Medical Center), கழிவறைக் கட்டமைப்பு (Washrooms) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி அறை என்பவற்றிலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிறு அளவிலான திருத்தவேலைகள் மற்றும் பராமரிப்புக்கள் இணைப்புப் பொறியியல் திணைக்களத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தாலும், பாரிய அளவிலான திருத்த வேலைகள் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் விடுவிப்பு

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை

இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor