உள்நாடு

400 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

(UTV | கொழும்பு) –

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், நாட்டில் நிலவும் சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றுக்கு

பல்பொருள் அங்காடியில் பிக்குவை தாக்கிய நபர் கைது!

மாணவர்களை அழைத்து வர நேபாளம் நோக்கி யு.எல் 1424 எனும் விஷேட விமானம்